புது கவிதையின் தோற்றம் வளர்ச்சி:
முன்னுரை:
காலம் என்னும் பாதையில்
கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை
என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி
ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல
பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை
எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதையின் வளர்ச்சி:
வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி
அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால்காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும். பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி,கு.ப.ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.
புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்:
1. மணிக் கொடிக் காலம்
2. எழுத்துக் காலம்
3. வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள்
புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின
1.மணிக்கொடிக் காலம்:
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள்புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன. இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர். இக்காலத்தில்,புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாகவிளங்கினர்.
2. எழுத்துக் காலம்:
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள்
இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன.ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்துவைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன்,
ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா, க.நாசுப்பிரமணியன்போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்.
3.வானம்பாடிக் காலம்:
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில்
புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி,முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன், ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக்கவிஞர்களாவர்.
புது கவிதை கவிஞர்கள் :
1) கவிஞர் ந. பிச்சமூர்த்தி:
ந. பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர்
4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்
பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை
அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை:
கும்பகோணத்தில் வாழ்ந்த
நடேச தீக்ஷிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிச்சமூர்த்தி
பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீக்ஷிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில்
ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப்
பிரசங்கங்கள் செய்தவர்.
பிச்சமூர்த்தி
கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.
தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925
முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து
அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
பிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில்
சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர
சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற
பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.
இந்தத் தத்துவ
மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக
இழையோடியது. "இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும்
மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த
நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.
புதுக்கவிதைகளின் முக்கியப் பண்பான
படிமங்களைப் பயன்படுத்தி ஆழம் தந்தவர் பிச்சமூர்த்தி. பூக்காரி என்ற கவிதையில் அன்பும்
அஹிம்ஸையும் போன இடம் தெரியாததை,
"வானெங்கும் எஃகிறக
தெருவெங்கும் பிணமல
பீரங்கிக் குரல்பேசக
கேட்டதொரு வேறுகுரல
அன்பும் அஹிம்ஸையும்
விற்றுவந்தேன் ஆதிமுதல
பூக்காரி பூவைப்போலக
கண்ணெடுப்பார் யாருமில்ல
எஃகிறகின் உயரம
தெய்வக்குரல் ஏறவில்லை"
2)
கவிஞர்
மீரா:
தமிழ்க் கவிஞர்களுள் பாரதியைப்போல் சமூகப் போராளிகளாகவும்
திகழ்ந்தவர்கள் மிகச் சிலர். அவர்களுள் ஒருவர் கவிஞர் மீரா. நடையில் எளிமை, கருத்தில்
வலிமை, தமிழ்க் கவிதை மரபில் பழுத்த புலமை, சொல்லுக்குச் சொல் புதுமை, அங்கதம் என்னும்
குறும்பு குதிக்கும் தமிழ்நடை, ஆனால் எவரையும் புண்படுத்தாத பண்பாட்டு வரையறை! ஒருவகையில்
ஈழத்து மஹாகவியுடன் மீராவை ஒப்பிடலாம். ஆனால் மீரா சிலவகைகளில் வேறுபட்டுத் தனித்து
நிற்கிறார்.
சாதனையாளர்:
மரபிலும், வசன கவிதையிலும், புதுக்கவிதையிலும்
சாதனைகள் செய்தவர். சிறந்த உரைநடை எழுதியவர். முன்னணிப் பதிப்பாசிரியராக இருந்து பல
இளம் படைப்பாளிகளைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்தவர். இலக்கிய இதழ்களின் ஆசிரியர்.
ஆசிரியர் சங்கம் மற்றும் உழைக்கும் மக்களின் சங்கத் தலைமைப் பொறுப்பில் இருந்து உரிமைப்
போராட்டங்கள் நடத்தியவர். இப்படிப் பல சிறப்புகளுக்கு உரியவர் மீரா.
பிறப்பு:
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் (இப்போது சிவகங்கை) மாவட்டத்தில் உள்ள சிவகங்கையில்
10-10-1938-இல் பிறந்தார். பெற்றோர்: மீனாட்சி சுந்தரம் - இலட்சுமி அம்மாள். இளம்பருவத்தில்
பர்மாவில் (மியான்மர்) வளர்ந்தார்.
கல்வி:
மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கிய முதுகலைப் பட்டம் பெற்றார். கவிஞர்
அப்துல் ரகுமான் இவரது வகுப்புத் தோழர். கவிதை நண்பர்.
பணி:
1962 முதல் சிவகங்கை மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி தொடங்கினார்.
முதல்வர் பொறுப்பு வரை உயர்ந்து ஓய்வு பெற்றார்.
ஈடுபாடு:
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தந்த
பகுத்தறிவு; அறிஞர் அண்ணாவின் இயக்கம் தந்த தமிழ்மொழிக் காதல்; அறிஞர் காரல் மார்க்சின்
பொதுவுடைமைச் சித்தாந்தம் இவை மூன்றின் சங்கமம் கவிஞர் மீரா.
படைப்புகள்:
மீ. ராசேந்திரன் என்ற பெயர் கவிதைக்காக மீரா
ஆனது. இராசேந்திரன் கவிதைகள் (1965), மூன்றும் ஆறும் (1967), கனவுகள் + கற்பனைகள்
= காகிதங்கள் (1971), ஊசிகள் (1974), கோடையும் வசந்தமும் (2002), குக்கூ (2002) ஆகியவை
இவரது கவிதை நூல்கள். பல உரைநடை நூல்களும் படைத்துள்ளார். குறிப்பிடத்தக்கது வா இந்தப்
பக்கம்.
விருதுகள்:
சிற்பி கவிதை விருது, கவிக்கோ விருது முதலிய
பல விருதுகள் பெற்றார். 1-9-2002-இல் மறைந்தார்.
சுயநல அரசியல்:
பணத்துக்காக, பதவிகளுக்காகக் கட்சிவிட்டுக்
கட்சி மாறினர் கீழ்த்தர அரசியல்வாதிகள். இவர்களால் பொதுவாழ்க்கை தரம் தாழ்ந்து போனது.
இதைக் குத்திக் காட்டும் ‘வேகம்’ - ஒரு தரமான எள்ளல் கவிதை.
எங்கள் ஊர் எம்.எல்.ஏ
ஏழு மாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம்?
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்.....
என்ன தேசம்
இந்தத் தேசம்? (ஊசிகள், பக்கம்,
13)
3) கவிஞர்
கவிக்கோ.அப்துல்
ரகுமான்:
அப்துல் ரகுமான்,(பிறப்பு: நவம்பர்
9, 1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று
சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.
எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில்
நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார்.
அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக்
கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள்,
படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில்
கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ,
கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர்
ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக்
கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி
உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
பிறப்பு:
அப்துல் ரகுமான் மதுரையில் வைகை
ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத்
– ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி:
அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப்
பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர்
கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று
இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை
துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம்
பயின்றார்.சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப்
பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு
என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணி:
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும்
தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம்
பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள்
வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக்
கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக
உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின்
தலைவராகப் பணியாற்றினார்.
கவிதை:
பித்தன்
பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில்
ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப்
பார்த்து
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்
என்றான்
அவன் மேலும் சொன்னான்…
குழந்தைகளே பாடப் புத்தகங்களாக
இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத்
தருகிறீர்கள்?
உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன
காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச்
சேர்வீர்கள்?
இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை
இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை
ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக
இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.
நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க
கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்
நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,
உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.
எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக
இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.
4)
கவிஞர் மு.மேத்தா:
மு. மேத்தா (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர்
5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப்
பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார். உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த
மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால்
மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல்
சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும்
இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின்
அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள்,
புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு.
மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள்
"ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது
"சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா
இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள்
எழுதி வருகிறார்.
"நான் வெட்ட வெட்டத்
தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை"
போன்ற வரிகள் இவர்
போக்கினைக் காட்டும்.
"வானம்பாடி" என்ற புதுக்கவிதை
ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.
5)
கவிஞர் வைரமுத்து:
பிறப்பு வைரமுத்து சூலை 13, 1953 (அகவை 63) வடுகபட்டி,
தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா தொழில்
கவிஞர் பாடலாசிரியர் குறிப்பிடத்தக்க விருது(கள்) சிறந்த பாடலாசிரியருக்கான குடியரசுத்
தலைவர் விருதை 6 முறை (1985),(1993),(1994),(1999),(2002),(2010) பெற்ற பெருமைக்குரியவர்,
பத்ம ஸ்ரீ பிள்ளைகள் மதன் கார்க்கி கபிலன் வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953),
புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய
அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப்
பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.
முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள்
புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
வாழ்க்கைக்
குறிப்பு:
தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம்
அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக்
குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார்.
1980ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.."
எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி.
இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.
கவிதை:
சிரிப்பு
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
வாழ்வின்மீது இயற்கை
தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு
எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு
உதடுகளின் தொழில்கள்
ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்
சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு
சிரிக்கத் திறக்கும்
உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது
ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது
சிரித்துச் சிந்தும்
கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்:
சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,
பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர்
எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.
பிறப்பு:
பொ.பாலசுப்பிரமணியம்
சூலை 29, 1936
ஆத்துப் பொள்ளாச்சி, பொள்ளாச்சி,
கோவை மாவட்டம்
கல்வி :
முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம்,
1987)
முதுகலை, தமிழ் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1956)
இடைநிலை (திருச்சி ஜமால் முகமது
கல்லூரி, 1953)
பள்ளி (தத்தமங்கலம் சீலி நினைவு
உயர்நிலைப்பள்ளி, பாலக்காடு, 1951)
பணி:
கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர்,
இதழாளர், பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாளர், சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்
பெற்றோர்:
கி. பொன்னுசாமி, கண்டியம்மாள்
இன்றைய நிலையை மிக நுட்பமாகப் படம் பிடித்துக்காட்டும்
கவிதை .
அந்தக் காலத்தில்
சாப்பிடக் கடைக்குப் போனால்
மெதுவடை முறுகல் தோசை
தயிர்சாதம் போளி
அப்புறம் உதடு சிவக்க
வெற்றிலை பாக்கு !
இப்போது எல்லாம் மாறி
விட்டது .
ஆனியன் ரோஸ்ட்
கர்டு ரைஸ்
மெதுவடா ஆக்டா பேடா
பீடா போடா
தமிழ் வளர்ச்சி என்னே
மை குட்னஸ்
எத்தனை அபாராம் ! ( சூரிய நிழல் ப .91 )
மரபு கவிதை தோற்றம் வளர்ச்சி
மரபுக்கவிதை காலத்தால் முந்தியது. பல்வேறு
இலக்கிய நூல்களாக இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தழைத்து விளங்கும் சிறப்புடையது.
புதுக்கவிதை, கடந்த இருபதாம் நூற்றாண்டில் தோன்றிச் செழிக்கத் தொடங்கியது. இக்கவிதைகளின்
தோற்றம், பெயர்க்காரணம், நோக்கம், நூல்கள், படைப்பாளர்கள், வளர்ச்சி, இன்றைய நிலை ஆகியன
குறித்து இங்குக் காண்போம்.
தோற்றம்:
நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் தொன்மையானதாக
விளங்குவது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்நூல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்டதாகக் கருதப் பெறுகின்றது. இதற்கும் முந்தையனவாக இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன.
அவ்விலக்கண நூல்கள் ‘எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல’
இலக்கியத்திலிருந்து
இலக்கண நூல்கள் ஏற்படுகின்றன என்னும் விதிக்கு இணங்க, தமக்கு முற்பட்ட இலக்கியங்களைக்
கொண்டு இலக்கணம் வகுத்தனவாகும். இலக்கண நூல்களில் செய்யுள் தொடர்பான எழுத்து, சொல்,
அகம்-புறம் என்னும் பாடுபொருள் குறித்த செய்திகள், யாப்பு, அணி ஆகியன பற்றிய வரையறைகள்
இடம் பெற்றிருக்கும். எனவே இவற்றைக் கருதிப் பார்க்கும்போது, செய்யுள் என்னும் கவிதை
வடிவம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக்காலத் தொன்மையுடையது என உறுதிபடக் கூறலாம்.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன
குறித்த இலக்கணங்களைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. இறையனார் களவியல் உரையில்
மறைந்து போன சங்க நூல்களின் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை
ஆகிய தலைச் சங்க நூல்களும், கலி, குருகு, வியாழமாலையகவல், வெண்டாளி ஆகிய இடைச் சங்க
நூல்களும் அவ்வகை நூல்களுள் அடங்கும். சிற்றிசை, பேரிசை என்பன கடைச்சங்கத்தில் இருந்து
மறைந்தவற்றுள் அடங்கும். ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’
என
மயிலை சீனிவேங்கடசாமி, இவ்வகை நூல்கள் குறித்துத் தனியொரு நூலே எழுதியுள்ளார். அவற்றின்வழி
மரபுக்கவிதையின் தொன்மையை நன்கு அறியலாம்.
தொன்று
நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை
வாணர்களும் - இவள்
என்று
பிறந்தவள் என்றுண ராத
இயல்பின
ளாம்எங்கள் தாய்
எனப் பாரதியார் பாடும்
பாடல், மரபுக்கவிதையின் காலத் தொன்மைக்கும் பொருந்தக் கூடியதாகும்.
மரபு
கவிதை கவிஞர்கள்:
1) பாரதியார்:
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி
(திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர்,
விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி
என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு,
நவீனத் தமிழ்க்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்[3]. தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும்
எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப
நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின்
நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே
முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.பாரதி, இந்திய வரலாற்றின்
திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர்,
வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர்.
இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.
பிறப்பு:சுப்பையா
(எ) சுப்பிரமணியன்,திசம்பர் 11, 1882,எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியாவின்
கொடி இந்தியா
இறப்பு:செப்டம்பர்
11, 1921 (அகவை 38)சென்னை, இந்தியா
இருப்பிடம்: திருவல்லிக்கேணி
மற்ற
பெயர்கள்: பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்
பணி: செய்தியாளர் அறியப்படுவது கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை
வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி
சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும் பல.
பின்பற்றுவோர்: பாரதிதாசன்
அரசியல் இயக்கம்: இந்திய விடுதலை இயக்கம்
சமயம்: இந்து சமயம்
பெற்றோர்: சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்
வாழ்க்கைத் துணை: செல்லம்மாள்
பிள்ளைகள்: தங்கம்மாள் (பி: 1904),சகுந்தலா
(பி: 1908)
பாடல் :
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
2)பாரதிதாசன்:
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21,
1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய
இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது
கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி
மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
பிறப்பு: கனக.
சுப்புரத்தினம்,ஏப்ரல் 29, 1891,புதுவை
இறப்பு: ஏப்ரல் 21, 1964 (அகவை
72), சென்னை
புனைப்பெயர்: பாரதிதாசன்
தொழில்: தமிழாசிரியர், கவிஞர்,
அரசியல்வாதி
நாடு: இந்தியா
இனம்: தமிழர்
கல்வி: புலவர்
கல்வி நிலையம்: கல்வே கல்லூரி, புதுவை
எழுதிய காலம்: 20ஆம்
நூற்றாண்டின் தொடக்கம்
இலக்கிய வகை: தமிழிலக்கியம் - கவிதை, நாடகம், கட்டுரை, கதை
கருப்பொருட்கள் இனமானம், அரசியல்
இயக்கம்: திராவிட இயக்கம்
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்): பாண்டியன்
பரிசு
குறிப்பிடத்தக்க விருது(கள்): சாகித்ய அகாதெமி விருது
துணைவர்(கள்): பழநி
அம்மையார்
பிள்ளைகள்: கோபதி,சரசுவதி,
வசந்தா,இரமணி
கவிதை:
அச்சம்
(காதலன் தன் காதலியைத்
தேடிச் செல்கிறான்.)
காதலன்
அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே?
பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ!
கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச
வஞ்சக் கள்வன் மாய்த்திட் டானோ!
(தேடிச் செல்லுகின்றான். பல புறங்களிலும்
அவன் பார்வை சுழல்கின்றது.)
அவன் பார்வை சுழல்கின்றது.)
3) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை
27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில்
வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று
நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட
கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக்
கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
பிறப்பு: ஜூலை
27, 1876 தேரூர், கன்னியாக்குமரி மாவட்டம்
இறப்பு: செப்டம்பர் 26, 1954 (அகவை
78)
அறியப்படுவது: கவிஞர்
பட்டம்: கவிமணி
பெற்றோர்: சிவதாணுப்பிள்ளை,
ஆதிலட்சுமி
வாழ்க்கைத் துணை: உமையம்மை.
கவிதை :
ஈயும் எனக்குத் தோழன் - ஊரும்
எறும்பும் எனக்கு நேசன்;
நாயும் எனக்குத் தோழன் - குள்ள
நரியும் எனக்கு நண்பன்.
4) நாமக்கல் கவிஞர்:
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
(அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி
இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற
தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில்
பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின்
கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும்
என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால்
இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.
பிறப்பு:வெ.
இராமலிங்கம் அக்டோபர் 19, 1888 மோகனூர், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு: ஆகத்து
24, 1972 (அகவை 83)
தேசியம்: இந்தியர்,
மற்ற பெயர்கள்:காந்தியக்
கவிஞர்
அறியப்படுவது: கவிஞர்,
எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்: மலைக்கள்ளன்,
நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன.
அரசியல் இயக்கம்: இந்திய
விடுதலை இயக்கம்
சமயம்: இந்து சமயம்
பெற்றோர்: வெங்கடராமன்,
அம்மணியம்மாள்.
கவிஞரின் நாட்டுப்பற்று:
முத்தமிழிலும், ஓவியக்கலையிலும்
வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு
பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
’கத்தி
யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத்
தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.
எழுதிய நூல்கள்:
·
மலைக்கள்ளன் (நாவல்)
·
காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
·
பிரார்த்தனை (கவிதை)
·
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
·
திருக்குறளும் பரிமேலழகரும்
·
திருவள்ளுவர் திடுக்கிடுவார்
·
திருக்குறள் புது உரை
·
கம்பனும் வால்மீகியும்
·
கம்பன் கவிதை இன்பக் குவியல்
·
என்கதை (சுயசரிதம்)
·
அவனும் அவளும் (கவிதை)
·
சங்கொலி (கவிதை)
·
மாமன் மகள் (நாடகம்)
·
அரவணை சுந்தரம் (நாடகம்)
5) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல்
13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர்
ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய
சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
பிறப்பு: அ.கல்யாணசுந்தரம்,ஏப்ரல்
13, 1930,செங்கப்படுத்தான்காடு
இறப்பு: அக்டோபர் 8, 1959 (அகவை 29)
தொழில்:பல தொழில்கள்
கட்டுரையைப் பார்க்க
எழுதிய காலம்:
1955-1959
துணைவர்(கள்): கௌரவம்மாள்
பிள்ளைகள்: க.குமரவேலு
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி:
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி
எழுப்பிய கேள்வி.
6) கண்ணதாசன்:
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17
1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும்
மேற்பட்ட கவிதைகள்,
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள்
பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன்
ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய
அகாதமி விருது பெற்றவர்
பிறப்பு: முத்தையா,சூன்
24, 1927,சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: அக்டோபர் 17, 1981 (அகவை
54),சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர்: காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன்,
ஆரோக்கியசாமி
தொழில்: கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர்,
இலக்கிய ஆசிரியர்
நாடு: இந்தியா
இனம்: தமிழர்
நாட்டுரிமை: இந்தியர்
எழுதிய காலம்: 1944-1981
குறிப்பிடத்தக்க விருது(கள்): சிறந்த
வசனத்திற்கான தேசிய விருது 1961 குழந்தைக்காக
சாகித்திய அகதமி விருது:1980
சேரமான் காதலி
துணைவர்(கள்): பொன்னழகி,பார்வதி,வள்ளியம்மை
பிள்ளைகள்: 15
கவிதை :
கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை
ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ
தீபத்தின் ஜோதியில் திருக்குறள்
படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே